IGNOU: தொலைதூரக் கல்வியில் சேர கடைசி தேதி பிப்.15 வரை நீட்டிப்பு

By News Dsk

மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் - Indira Gandhi National Open University (IGNOU), 2025-ம் ஆண்டு ஜனவரி பருவ சேர்க்கைக்கான கடைசி தேதியை பிப்ரவரி 15 வரை நீடித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது,

இதுதொடர்பாக IGNOU சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

Indira Gandhi National Open University (IGNOU) - தொலைதூரக் கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு இளங்கலை, முதுகலை, சான்றிதழ் படிப்புகள், டிப்ளமா போன்ற பல்வேறு படிப்புகளை அளித்து வருகிறது. அதன்படி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2025-ம் ஆண்டு ஜனவரி பருவ சேர்க்கைக்கான கடைசி தேதியை பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தவற விட்ட மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிப்ரவரி 15 வரை ஆன்லைனில் (https://ignouadmission.samarth.edu.in) விண்ணப்பிக்கலாம்.

மேலும், சேர்க்கை உறுதி செய்யப்பட்ட பிறகு தகுதியான மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு ஆன்லைனில் (www.scholarships.gov.in/) விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக அதிகாரபூர்வமான இணையதளத்தை (www.ignou.ac.in) அணுகலாம் என்றும் அல்லது சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

#IGNOU Admission Last Date for 2025 is extended till Feb 15, 2025.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE