இன்றைய முக்கிய செய்திகள் (ஏப்ரல் 19 2026) #BREAKING #TAMILNEWS

By News Dsk

இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

ஹார்முஸ் ஜலசந்தி: ஒப்​பந்தத்தை மீறிய அமெரிக்கா: மீண்டும் மூடிய ஈரான்!

அமெரிக்கா - ஈரான் இடையே இறுதி ஒப்​பந்​தம் ஏற்​படும் வரை ஈரான் துறை​முகங்​கள் மீதான கடற்​படை முற்​றுகை தொடரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். இது ஒப்​பந்த விதி​மீறல் என்​ப​தால், ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடி கட்​டுப்​பாடு​கள் விதிப்​ப​தாக ஈரான் ராணுவம் அறி​வித்​துள்​ளது.

--------------------------------

தொகுதி மறுவரையறை: 2051 வரை தள்ளி வைக்க ஸ்டாலின் வலியுறுத்தல்!

தொகுதி மறு​வரையறை மசோதா தோல்வி பெற்​றதை முன்​னிட்டு இண்​டியா கூட்​டணி கட்​சி தலை​வர்​களுக்கு நன்றி தெரி​வித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட காணொலி​யில் "தொகுதி மறு​வரையறை செய்​வதை 2051-ம் ஆண்டு வரை தள்ளிவைக்​கும் வித​மாக சட்​டத் திருத்​தம் கொண்டு வரவேண்​டும்" என்று தெரி​வித்​தார்.

--------------------------------

மகளிர் உரிமைக்கு எதிராக திமுக - காங் செய்த துரோகம்: அதிமுக, பாஜக , பாமக, தமாகா குற்றச்சாட்டு!

பெண்​களுக்​கான 33 சதவீத இடஒதுக்​கீடு மசோதா தோற்​கடிக்கப்​பட்​டிருப்​பது, மகளிர் அதி​காரம் மற்​றும் மகளிர் உரிமைக்கு எதி​ராக திமுக - காங்​கிரஸ் கூட்​டணி செய்த மிகப்பெரிய துரோகம் என்று அதி​முக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட NDA கட்​சித் தலை​வர்​கள் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளனர்.

--------------------------------
திமுக-வின் அனைத்து ஊழலையும் விசாரிப்போம்: பிரதமர் மோடி உறுதி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம், கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி "திமுகவின் அனைத்து ஊழலையும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்" என்று அறிவித்துள்ளார்.

--------------------------------

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அனுமதியை நீட்டித்தது அமெரிக்கா!

ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு ஒரு மாத காலம் அமெரிக்கா அளித்த விலக்கு ஏப்ரல் 11-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 1 மாதம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க நிதித் துறை அறிவித்துள்ளது.

--------------------------------

தமிழகத்தில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு!

தமிழகத்​தில் நடப்​பாண்​டில் நாய்க்​கடி​யால் 2 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர் என்றும் ரேபிஸ் நோய் தொற்​றால் 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர் என்றும் உத்​தேச புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன. மேலும் தமிழகம் முழு​வதும் சுமார் 25 லட்​சம் தெரு​நாய்​கள் இருக்​கலாம் என்றும் தெரிவிக்​கின்​றன.

--------------------------------

ஐபிஎல் 2026: சிஎஸ்கே அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

ஐபிஎல் 2026 தொடரின் 27-வது லீக் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. 195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE