வாழ்க்கை ஓட்டத்தில் ஜனவரி 1 என்பது முந்தைய நாளின் நீட்சி என்றாலும் பெரும்பாலான மக்கள் இதை ஒரு புதிய தொடக்கமாகவே பார்க்கிறார்கள். அந்த வகையில் 2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். கொண்டாட்டம் என்பது ஒவ்வொரு மனிதருக்கமும் மாறுபடும். சிலர் நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவர், சிலர் கோவிலுக்கு / வழிபாட்டு தலங்களுக்கு செல்வர், சிலர் குடும்பத்தினருடன் கொண்டாடுவர்.
எது எப்படியாயினும் பெரும்பாலானோர் செய்யும் ஒரு முக்கியமான வேலை என்பது புத்தாண்டில் புதிய தீர்மானங்களை எடுப்பதும் அதில் சில நாள்கள் மட்டும் அந்த தீர்மானங்களை கடைப்பிடித்து விட்டு மறந்து விடுவதும் தான். மீண்டும் ஆண்டு இறுதியில் எதுவும் செய்யவில்லையே என கவலைப்படுவதும் தான். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஒருசிலர் இதற்கு விதிவிலக்கு. இந்த நிலையில் கண்டிப்பாக வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக சில தீர்மானங்கள் குறித்த பரிந்துரைகள் இங்கே...
1. கற்றல்:
புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமன்றி இது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தனி மனித ஒழுக்கத்திற்கும் பெரிதும் பயன்படும்.
2. சேமிப்பு:
எதிர்கால நலன் கருதி இன்று முதல் சேமிக்கத் தொடங்குங்கள். இது தேவையற்ற செலவுகளை குறைப்பதுடன் எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல வாழ்க்கையை கற்று கொடுக்கும்.
3. உடல்நலம்:
புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற தவறான பழக்க வழக்கங்களை கைவிடுவது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கும். மேலும் நோய்களில் இருந்து விடுபட்டு உங்கள் உடலை ஆரோக்கியமாக கொள்ளவும் அவசியம். இதை தொடர்ச்சியாக சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கொண்டு வரலாம்.
4. குடும்பம்:
அலுவலக நேரத்தைத் தவிர மற்ற நேரத்தை குடும்பத்திற்காக ஒதுக்கவும். இன்று முதலாவது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம்.
5. மின்னணு சாதனங்கள்:
டிஜிட்டல் சாதனங்கள் தான் இன்றைய உலகம் என்று ஆனதற்கு பிறகு இது வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரிடமும் பயன்பாடு அதிகரித்துவிட்டது. மொபைலையும், சமூக வலைத்தளங்களையும் சமூக ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் தீர்மானத்தை எடுங்கள்.