ஆண்டாள் திருப்பாவை பாடல் 12 (மார்கழி 12-ம் நாள்): மனத்துக்கு இனியானைப் பாட நீ வாய் திற!

By News Dsk

ஆண்டாள் திருப்பாவை 12:

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!

பொருள்: "எருமைகள், பசியால் கத்தித் கொண்டிருக்கும் கன்றுகளை நினைந்து தானாக மடியில் சொரிந்து, இல்லத்தின் வாசல்கள் சேறாக காட்சியளிக்கும் அளவுக்கு செல்வ செழிப்பான எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனை அழிக்க ராமாவதாரம் எடுத்து, அவனை தன் கோபத்தினால் அழித்த நம் மனதிற்கு பிடித்த நாராயணனின் பெருமையைப் பாட, இந்த கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது உன் வீட்டு வாசலில் நாங்கள் அனைவரும் காத்து நிற்கின்றோம். ஆனால் நீயோ இன்னும் வாய் திறவாமல் பேருறக்கத்தில் இருக்கிறாயே!. சீக்கிரம் எழு" என்று ஆண்டாள் தன் தோழியை வினவி எழுப்புகிறாள்.

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE