மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்)
மகர ராசி அன்பர்களே..
உழைப்பே உயர்வு தரும் என்று உறுதியாக நம்பும் மனநிலை கொண்ட உங்களுக்கு, இந்த மாதம் பணத் தேவை அதிகரிக்கும். ராசிநாதன் சனி சஞ்சாரத்தால் விரும்பிய இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். சுபச்செலவு அதிகரிக்கும்.
எதில் கையெழுத்து போடுவதாயிருந்தாலும் கவனம் தேவை. எழுத்து பூர்வமாக உறுதிமொழி அளித்து எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் ஆடம்பர செலவு உண்டாகும். வாகன யோகம் கிடைக்கும்.
தனஸ்தானத்தை ராசிநாதன் அலங்கரிப்பதால், வியாபாரம், கூட்டு தொழில் போன்றவற்றில் இருப்பவர்கள் சக உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயனற்ற பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். பணி நிமித்தமாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
கணவன், மனைவிக் கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு உங்கள் அன்பான பேச்சுவார்த்தையால் சுமுகமாக நீங்கும். பெண்களுக்கு பண வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும்.
எவருடனும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதால், மதிப்பு உயரும். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது.
அரசியல் துறையினருக்கு கூடுதல் கவனம் தேவை. கலைத் துறையினர் தங்கள் சாதுர்யமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. புதிய நண்பர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சக மாணவர்களிடம் நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொள்வது நல்லது.
பரிகாரம்: விநாயக பெருமானை வழிபட வினைகள் தீரும்
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம் தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....