திருக்குறள் அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து - குறள் 2

02 Jan, 2025 06:38 AM
thinam-oru-thirukkural-kadavul-vazhthu

அதிகாரம் 1 / Chapter 1

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

மு.வ விளக்கம்:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

சாலமன் பாப்பையா விளக்கம்:

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

கலைஞர் விளக்கம்:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை

Tags:

#Thirukkural in Tamil #Thirukkural quotes in Tamil #Thirukkural status in Tamil #கடவுள் வாழ்த்து அதிகாரம் #திருக்குறள்

Trending now

We @ Social Media