இன்றைய ராசி பலன்கள் - 31-01-2025

மேஷம்: வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும்.
ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
மிதுனம்: வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் நாள். தம்பதிகளின் இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களில் விரும்பியது கிடைக்கும்.
கடகம்: எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது முன்னற்றத்திற்கு நல்லது. வியாபாரத்தில் பங்குதாரரை அனுசரித்து செல்லவும்.
சிம்மம்: இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றி கிடைக்கும். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: தம்பதிக்குள் இருந்த பிரச்சினை குறைந்து அன்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்.
பதவிகள் தேடி வரும்.
துலாம்: பொறுப்பான பிள்ளைகளால் ஏற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியான பயணம் அனுகூலத்தை தரும்.
விருச்சிகம்: சுறுசுறுப்பும், சிந்தனைத்திறனும் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
தனுசு: ஆடம்பர செலவு குறைந்து, முதலீடு அதிகரிக்கும். உறவுகள் வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் தைரியமான முடிவு எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.
மகரம்: உறவினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்பம்: அனுசரித்துப் செல்வதால் குடும்பத்திலும், வெளியிலும் நல்ல நிலைமைக்கு வரலாம். வீண் செலவு வரக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மீனம்: கவனமாக பேச்சு காலத்திற்கும் நல்லது. வியாபார ரீதியான பயணங்கள் அலைச்சல் தருவதாக இருந்தாலும், முயற்சியால் விரும்பியதை அடையலாம்.
குறிப்பு: பலன்கள் அனைத்தும் பொதுவான ஜோதிட கணிப்புகளே. ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணம், செயல் மற்றும் முயற்சிகளை பொறுத்து நாள் அமையும்.
Tags:
#Daily Horoscope #tamil rasi palangal #daily rasi palan #jodhidam #இன்றைய ராசி பலன்