தினம் ஒரு குறள்: கடவுள் வாழ்த்து - குறள் 1

01 Jan, 2025 03:02 PM
thinam-oru-thirukkural-kadavul-vazhthu

அதிகாரம் 1 / Chapter 1

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

மு.வ விளக்கம்:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் விளக்கம்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

Tags:

#Thirukkural in Tamil #Thirukkural quotes in Tamil #Thirukkural status in Tamil #கடவுள் வாழ்த்து அதிகாரம் #திருக்குறள்

Trending now

We @ Social Media