இந்து கலாச்சாரத்தில் நல்ல நாள் என்ற மரபு மிகவும் முக்கியமானதாகும். இவை கோள்களின் நிலை மற்றும் நல்ல நேரத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் செய்யப்படும் ஒவ்வொரு செயல்களும் வெற்றியடையும் என்று நம்பப்படுகிறது.
திருமணம், கிரகப் பிரவேசம், புதிய தொழில் தொடங்குதல் போன்ற எந்த காரியமாக இருந்தாலும் நல்ல நாள் பார்த்து தொடங்குவது என்பது தொன்று தொட்டு பின்பற்றப்படும் நம்முடைய கலாச்சார வழக்கம். இதையே சுபமுகூர்த்த நாள் என்றும் சொல்வோம். அதேபோல தெய்வ வழிபாட்டிற்கும் கூட ஒவ்வொரு நாட்களை தேர்ந்தெடுப்பது வழக்கம்.
குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை, அஷ்டமி, நவமி போன்ற திதி, நட்சத்திரங்களின் அடிப்படையிலும் தெய்வ வழிபாட்டிற்கும் மற்ற விசேஷங்களுக்கும் நாட்களை தேர்வு செய்வது மரபு. அதன்படி ஒவ்வொரு மாதத்திலும் வரும் இந்த நாட்களை எளிதில் அறிந்து கொள்ள உதவுவதே இப்பகுதியின் நோக்கமாகும்.